வெள்ளெருக்கு
====================
வெள்ளெருக்கு, நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர். எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு. இதை வீட்டிலும் வளர்க்கலாம்.
புதர்செடி வகையைச் சேர்ந்த வெள்ளெருக்கு வேர் பாம்புக்கு ஆகாது என்று சொல்லியிருக்கிறார்கள். சக்தி வாய்ந்த வெள்ளெருக்குச் செடியின் இலை, பூ, பால், பட்டை, வேர் முதலியன மருத்துவப் பயனுடையது.
''எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும்
வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது''
என்கிறது சித்தர்பாடல்.
வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளவும். இதனால் இரைப்பு நோய் அதிகரிக்கும் சமயம் ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் அருந்த உடனே தணியும்.10 கிராம் இஞ்சி,3வெள்ளெருக்கன் பூ,6 மிளகு இவற்றை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் இருவேளை பருகி வர இரைப்பு குணமாகிவிடும்.எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம், கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம், கட்டி குறையும். ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இதனால் விஷம் இறங்கிவிடும். இதன்பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்கவேண்டும்.
வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளவும். இதனால் இரைப்பு நோய் அதிகரிக்கும் சமயம் ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் அருந்த உடனே தணியும்.10 கிராம் இஞ்சி,3வெள்ளெருக்கன் பூ,6 மிளகு இவற்றை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் இருவேளை பருகி வர இரைப்பு குணமாகிவிடும்.எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம், கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம், கட்டி குறையும். ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இதனால் விஷம் இறங்கிவிடும். இதன்பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்கவேண்டும்.
பயன்கள்.-
இதன் பால் தீ போல சுடும். பட்ட இடம் புண்ணாகும். புழுக்களைக் கொல்லும். விஷக்கடிகளை குணமாக்கும். பயிர்களுக்கு எதிர்ப் பாற்றலைத் தரும்.இலை நஞ்சு நீக்கல் வாந்தியுண்டாக்குதல் பித்தம் பெருக்குதல் வீக்கம் கட்டிகளைக் கரைத்து வேதனை குறைதல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை, ஆகியவை கோழையகற்றுதல் பசியுண்டாக்குதல், முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது.
பாம்பு - தேள் கடி
================
இதன் இலையை அரைத்து 5 கிராம் அளவு பாலில் சாப்பிடவும். அரைத்து கடிவாயில் கட்டவும். விஷம் இறங்கும். எலிக் கடிக்குக் கொடுக்கலாம்.
குதிங்கால் வலி
================
பழுத்த இலையை குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்துவர குணமடையும்.
காலணிகள் இல்லாமல் நடப்பவர்களின் காலில் முள் தைத்தால், அந்த இடத்தில் எருக்கன் இலையை உடைத்து அதிலிருந்து வரும் பாலை முள் தைத்த இடத்தில் விட்டால், அந்த முள்ளானது முற்றிலுமாக வெளியேறிவிடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.
எருக்கன் பூவைக் காயவைத்து பொடியாக நறுக்கி, அந்த பொடியில் 200 கிராம் எடுத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் பால்வினை நோய், தொழுநோய் குணமடையும்.
எருக்கன் செடியின் வேரை நெருப்பில் சுட்டு கரியாக்கி, விளக்கெண்ணெய் கலந்து நம் தோலின் மேல் பூசிவர ஆறாத காயங்களும் ஆறும். பொடுகு, படை, மூட்டுவலி, மூட்டு வீக்கம், மூலநோய்க்கு சிறந்த மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.
சித்த மருத்துவத்தில் சுவாச குடோரி என்ற மாத்திரை எருக்கம் பூவின் மூலம் தயாரிக்கப்பட்டு சளி, இருமல் போன்ற நோய்களுக்கு மருந்தாக வழங்கப்படுகிறது. எருக்கன் இலைகளை எரித்து அந்தப் புகையை வாய் வழியாக சுவாசித்தால் மார்பு சளி கரையும்.
சூடாக்கிய செங்கல்லில், பழுத்த எருக்கன் இலையை வைத்து அந்த இலக்கு மேல் குதிகாலை வைக்கவேண்டும். இவ்வாறு ஏழு நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குதிகால் வெடிப்பு, குதிகால் வலி சரியாகிவிடும்.
எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி நம் தோல் பொறுக்கும் அளவில் உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து கட்டினால் கட்டிகள் பழுத்து உடைந்து விடும்.
எருக்கன் இலையை காயவைத்து அந்தப் பொடி 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைத்தூள் 30 கிராம், இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்த பொடியை மூக்குப் பொடி போடுவது போல் மூக்கில் வைத்து உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.
வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்த கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆகியவை தீரும்.
10 கிரம் இஞ்சி, 3 வெள்ளருக்குப் பூக்கள், 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், இரைப்பு குறையும்.
இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் வைத்தியரின் ஆலோசனைப்படி செயல்படுவதே சிறப்பு. நன்றிகள்.
-----
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறு பிள்ளைகளுக்கு
துளசி விதையை சூரணித்து சிட்டிகையளவு தேனில் கலந்து வெறும் வயிற்றில் பதினைந்து தினங்கள் உட்கொள்ள சிறுநீரக மூத்திரப்பை பலம் பெற்று படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கைவிடுவார்கள்
0 Comments