muthukumar songs lyrics

 பாடல் *உன்பேர் சொல்ல*

படம் *மின்சார கண்ணா*
வரிகள் *நா.முத்துக்குமார்*
குரல் *ஹரிஹரன், சுஜாதா மோகன்*
இசை *தேவா*


உன்பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான்
உன் மேல் ஆசைதான்
உன் தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உதைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக
ஆசைதான்

கண்ணில் கடை கண்ணில்
நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் எந்தன் கால்கள்
காதல் கோலம் போடுமே
நாணம் கொண்டு மேகம்
ஒன்றில் மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை
நீயும் மூடும் அழகென
தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே
ப்ரம்மன் கூட ஒரு கண்ணதாசன்
தான் உன்னை படைத்ததாலே

நீயும் என்னை பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடருமே
நீயும் கோவிலானால்
சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் ஆனால்
ஒளியும் நானே ஆகிறேன்
வான் இன்றி
வெண்ணிலா இங்கில்லை
நாம் இன்றி
காதல் இல்லையே
காலம் கரைந்த பின்னும்
கூந்தல் நரைத்த பின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே 

Post a Comment

0 Comments