தனக்கு வலிக்கும் என்றால் கவனமாகவும் பிறருக்கு வலிக்கும் என்றால் கவனக்குறைவாகவும் பேசுவது தான் மனிதனின் உச்சக்கட்ட சுயநலம்.
தன்னை போல தான் எல்லோருக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும் என்று புரிந்துகொண்டால், யாரிடத்திலும் குறையோ பிழையோ கண்டுபிடிக்கத் தோன்றாது.
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டு கொள்வதுதான்
வளர்ச்சியின் அடையாளம்.
நமக்கு நடப்பது எல்லாம் நாம் நடந்து கொள்ளும் முறையில் தான் உள்ளது.
அறிவுரை கேட்டு திருந்தும் மனிதராக இருக்க வேண்டுமே தவிர, அடிபட்டு திருந்தும் மனிதராக இருக்கக் கூடாது.
800 வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருப்பேன்.
எல்லா உயிரினங்களும் என்னைப்பார்த்து பெருமைகொண்டது
வெட்டியே சாய்த்துவிட்டான்.... ஆறறிவுடைய மிருகம்.
அரைமணி நேரமாக மன உளைச்சலை ஏற்படுத்திய போட்டோ இது...
எத்தனை தலைமுறைகளை பார்த்திருக்கும்...
எவ்வளவு இலை சருகுகளை விருந்திற்கும் மருந்திற்கும் வயல் உரத்திற்கும் கொடுத்திருக்கும்...
எவ்வளவு பறவையினங்களை கூடுகட்ட மடி கொடுத்து ஆதரித்திருக்கும்...
இதன் கீழே எவ்வளவு ஜீவராசிகள் இளைப்பாறியிருக்கும்...
எத்தனை மனிதர்கள் வெயிலுக்கு ஒதுங்கியிருப்பார்கள்...
மரத்தை பார்த்தால் பட்டுபோனமாதிரியும் தெரியவில்லை
நிச்சயம் உயிருடன் உயிர்ப்புடன் இருந்த மரமே என தெரிகிறது...
அழிப்பது வெகு எளிது, நட்டு வளர்ப்பது கடினம் என இதனை வெட்டுபவர்கள் உணர வேண்டும். பூமியில் வாழும் உயிரினங்களில் மிகவும் அருவருக்கத்தக்க மிருகம்....மனிதன்....
1 Comments
தும்பிக்கை போன்ற
ReplyDeleteதொழிலே நசித்தாலும்
நம்பிக்கை ஒன்றினையே நாடு.!
குறட்பா
பெருவை கி.பார்த்தசாரதி