விதைகள் உறங்குவதில்லை


அந்தியூர் மைந்தனின் அழகிய நந்தவனத்தில் உலா வந்ததற்கு நன்றிகள்.


 முதல் பிறந்தநாள், முதல் காதல், முதல் குழந்தை என அனைத்தும் சிறப்பு.

அதுபோல் ஒரு படைப்பாளிக்கு முதல் நூல் சிறப்பிலும் சிறப்பு.

அந்த வகையில் என் எண்ணங்களை வார்த்தைகளாக்கி, வரிசையில் அடுக்கி,

அழகு பார்த்து, அச்சில் மெருகேறி முதல் புத்தகமாய் என் கையில் தவழ்கிறது

விதைகள் உறங்குவதில்லை.

 என் இதயத் தோட்டத்தில் பூத்தக் கவிதைப் பூக்கள் உங்களுக்காக மணம்

 வீசக் காத்துக்கொண்டிருக்கிறது. அதை (சு)வாசித்து, உங்கள் மனதை

 நிறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எண்ணத்தில் தோன்றுவதை இங்கே

 கொஞ்சம் சிந்தி வையுங்கள். எழுதிய தேனீ அதை  இதயக் கூட்டில் ஏந்திக்

கொள்ளும்.

நன்றிகளுடன்

அந்தியூர் மைந்தன் மா.செங்கோடன்.

நந்தவனத்தின் நுழைவு வாயில்

👇 


Post a Comment

7 Comments

  1. பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அழகிய படங்களுடன் மனம் விரும்பும் தலைப்புகளுடன் தூவிய க "விதைகள் உறங்குவதில்லை " எம்மனத்தில்... வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
  3. கவிஞரும் அன்புக்கும் பண்புக்கு சொந்தகாரர் அந்தியூர் மைந்தன் அவர்களின் "விதைகள் உறங்குவதில்லை"
    புத்தகத்தின் ஒவ்வொரு கவிதையும் புத்தம் புதிதாக முளைத்து
    சிந்தனை என்னும் செடியாக
    வளர்ந்து
    ஆனந்த மலராக மலர்ந்து
    மணக்கிறது.

    படிக்க படிக்க புத்துணர்ச்சியும்
    பேரின்பமும் தருகிற ஓர் பொக்கிசம்.
    வாழ்த்துகள் கவிஞருக்கு.
    மேலும் பற்பல இதழ்கள் (புத்தகங்கள்) படைத்து செந்தமிழோடு பெருமைச் சேர்க்க இதயப்பூர்வமான வாழ்த்துகள் 💐


    ReplyDelete
  4. விதைகள் உறங்குவதில்லை, அவை மண்மீது கொண்ட காதலால் ! காதலரைச் சேர்ப்பது உன் கடமை! அதை மண்ணில் சேர்த்துவிடு!

    ReplyDelete
  5. புன்னகையில் தொடங்கி புத்துணர்ச்சி அளித்தாய்!
    நிம்மதியாய்த் தொடர்ந்து வாசிக்க
    நிலையை நிர்மானித்தாய்!
    கற்றலின் இனிமை காட்டி கல்விக்கு மதிப்பளித்தாய்!
    எம்மொழியிலும் சிறந்தது என் தாய்மொழி என்று தாய்மொழிக்கு அழகூட்டினாய்!
    சிரிக்க அல்ல அல்ல... சிந்திக்க ஒரு கவிதை சிறப்பாய்த் தந்தாய்!
    வருங்காலத்தை வளமாக்க வாய்ப்புகளென்ன என்று வாஞ்சையாய் சொன்னாய்!
    சொல்லின் சுவையும் பொருளின் சுவையும் அறியும் பொதுவான உறுப்பு நாக்கு தானே!
    மலர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் மனித நேயத்தின் மாண்பினை சொன்னாய்!
    மண்குடத்தின் மகத்துவத்தை மணி மணியாய் சொன்னாய்!
    பிச்சை புகினும் கற்கை நன்று என்று கற்றவன் பெருமையைக் களிப்புடன் உரைத்தாய்!
    தேசியப் பறவையாய் உன் கவிதையை தேசமெங்கும் பரப்பினாய்!
    தலை குனிந்து படித்தவனும் தலை நிமிர்ந்து நிற்பான் என்று இந்த நூலகத்தின் பெருமை நுட்பமாய் உரைத்தாய்!
    உழைப்பின்றிக் கனவில் திரிபவன் குதிரைக்குக் கால்கள் இல்லையென்றாய்! மனிதர்களின் பிளவு மதவேற்றுமையின் விளைவென்று உணர்த்தினாய்!
    வாகன புகைகள், காடழித்தல் போன்ற மனித செயலால் மாசுபட்டது இவ்வுலகம்! இதனால் இயற்கை அன்னை கொண்டாள் கோபம்! அதுவே காற்றாய் கனமழையாய் புயலாய் எச்சரிக்கை செய்கிறதோ?
    இவ்வவசர உலகில் வாழும் தாய் தம் மக்களுக்கு உணவூட்ட நிலவை மறந்தாள்!
    உலகத்தில் கலப்படம் செய்ய முடியாத ஒரே பழம் நுங்கு தானே!
    கனவை நனவாக்க உழைக்கும்போது கனவுகள் பொய்ப்ப்பதில்லைதான்!
    வாழ்க்கையில் தெருவிளக்காயிருந்தவர் பின்னர் மக்கள் விரும்பும் சூரியனாய் வளர்ந்தார்!
    இந்நடிப்புத் திலகம் போல் என்னால் நடிக்க இயலுமா என ஏக்கத்துடன் பார்ப்பவரே அதிகம்!
    வானம் பொழிந்தால் பூமி வளமாகும்!
    கல்விக்காக பணத்தை விரயம் செய்யும் மக்கள்! மனிதநேயத்தை மறக்கும் குழந்தைகள்!
    மழையில் நனையும் மழலை போல் உம் கவிதை மகிழ்ச்சியில் நனைந்தேன்!
    உமக்கு அருகில் பிறந்தநாள் வந்தால் இது என் பிறந்தநாள் பரிசு! இதையே எனக்குத் திருப்பி அனுப்பினால் மே 20 ல் நான் பெறும் பிறந்தநாள் பரிசு!
    முழுவதும் முடிக்க ஆசை! அரை மனதுடன் முடிக்கிறேன்! மீதியை முடிந்தால் தொடர்கிறேன்!

    ReplyDelete
  6. விதைபோன்ற எண்ணம் விருட்சமாகி ஓங்க
    புதைத்திடுவோம் தீதைப் புரிந்து.!

    குறட்பா

    பெருவை கி.பார்த்தசாரதி

    ReplyDelete