செம்பருத்தியில் தேன்சிட்டு
சிங்காரமாய் அமர்ந்திட்டு
தேடுதே தன் துணைசிட்டை..
கோடைக்கு சிறந்தது பருத்தி தான் என்று செம்பருத்தி நாடி வந்தாயோ?
தென்றலோடு கூட்டணி கொண்டாயோ?
மகரந்தம் சேர்த்தால் தான் மானுடம் நிலைக்குமென்று
சொந்தம் கொள்கிறாயோ?
மகுடம் சூட்ட
மலர் பறிக்கிறாயோ?
நீ உயரப் பறப்பதால்
செம்பருத்தி
இந்தப் பிரபஞ்சத்தில்
உனக்கான உரிமையை
நீ விட்டுவிடாதே!
ஐம்பூதங்கள் அனைத்திற்கும் சொந்தம்.
அந்தியூர் மைந்தன் மா.செங்கோடன்
3 Comments
கூர்மூக்குத் தேன்சிட்டு கொஞ்சும் அதனழகைப்
ReplyDeleteபார்க்க்கின்ற போதிலே பாசமோங்கும்.! - யார்க்கும்
இயல்பை உணர்த்தும் இயற்கையின் காட்சி
*பயனாய் அமைந்தவோர்ப் பண்பு.!
நேரிசை வெண்பா
பெருவை கி.பார்த்தசாரதி
This comment has been removed by the author.
ReplyDeleteSirappu
ReplyDelete