தன் விபரக் குறிப்பு
பெயர். : மா.செங்கோடன்
ஊர். : அந்தியூர்
மாவட்டம் : ஈரோடு
அலைபேசி: 9487597113
மின்னஞ்சல்: sengodananthi@gmail.com
அனைவருக்கும் வணக்கம்.நான் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, விருப்பு ஓய்வு பெற்று விட்டவன். தமிழ் மேல் பற்று கொண்டு,அந்தியூர் தமிழ்ச் சங்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறவன்.
இணையத்தில், தமிழ் கவிதைக் குழுக்களில் கவிதைகள் எழுதி வருகிறேன்.
கோவை வசந்த வாசல் கவி மன்றத்தின் கவிஞர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
பல தொகுப்பு நூல்களில் எமது கவிதைகள் இடம் பெற்றுள்ளது.
தமிழைக் கற்றுக் கொண்டிருக்கும் ஒரு மாணவன் என்று நெஞ்சை உயர்த்தி சொல்லுவதில் பெருமைப்படுகிறேன்.
இந்தக் கற்சிலையை செதுக்கிய உளிகள், பல புத்தகங்களும், சொற்பொழிவுகளும் ஆகும்.
நான் அறியாமைச் சிறையில் ஆழ்ந்திருந்த காலத்தில், திரையிசைப் பாடல்களே, எனக்குத் திருவாசகம்.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடக்கும் சிந்தனை அரங்க, சீரிய சொற்பொழிவுகள் என்னை தமிழின்பால் ஈரத்துக் கொண்டது. கவிப்பேரரசின் கவிதை வரிகளும், மொழி பேசும் நடையும், எனக்கு கவியெழுத நடைவண்டி தந்தது.
நடை பழகும் போதே கோவை வசந்த வாசல் கவி மன்றம், ஆண்டுதோறும் தொகுப்பு நூல் வெளியிடுவார்கள். அதில் எனது கவிதையும் இடம் பிடித்தது. அதனால் தொடர்ந்து எழுத என் இதயமும் அடம் பிடித்தது.
கணினி யுகத்தில்,இணையத்தில் எண்ணிலடங்கா வரிகள் என்னைச் செதுக்கிக் கொண்டே உள்ளது.
விதைகளாகும் கவிதைகள் நூலில் நம் முன்னோர்கள் சொல்லிய கருத்துக்களைத் தான் கொஞ்சம் வீரியமாக்கி, உங்கள் கைகளில், அல்ல அல்ல, மனங்களில் விதைக்க விழைந்துள்ளேன்.
இந்தக் கவிதை விதைகள், நம் இதய வயல்களில் விழுந்து, வளர்ந்து,பூத்து,காய்த்து, கனிந்து பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறேன். பயனளிக்கும் தருணம் தான், தமிழ் சார்ந்த நல்லுலகம் எனக்கு வழங்கும் பெரும் பேராகக் கருதி அகம் மகிழ்வேன்.
இதோ எமது கவிப் பயணம் உங்களோடு ஆரம்பிக்கிறது....
எம் தாய்,தந்தை வழங்கிய கூற்றுகளில் முத்தானது, யாருடைய உழைப்பையும் யாசிக்காதே! என்பது.
அவர்கள் வழங்கிய நல்ல சிந்தனைகளையும் இங்கு விதைத்துள்ளேன். இந்த அருமையான நூலை எழுத, ஒத்துழைப்பு கொடுத்த எனது இல்லத்தரசி செ. கோமதி அவர்களுக்கும், ஊக்குவித்த நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
மேலும் இன்னூல் வெளிவரக் காரணமாக இருந்த சென்னைக் கவி நண்பர்கள், திரு. கவி செல்ல இராஜேந்திரன் மற்றும் கவிஞர், எழுத்தாளர் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன்.
எமது எழுத்துப் பயணத்தை தொடங்கி வைத்த மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் திரு குருமூர்த்தி அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த முதல் நூலை எனை ஈன்ற தெய்வங்களான மாரன் - பாப்பாள் ஆகியோருக்கு அர்ப்பணித்து அகம் மகிழ்கிறேன்.
நன்றிகளுடன்...
அந்தியூர் மைந்தன்
மா. செங்கோடன்.
Social Plugin