அமுதும்
சில்லறையானது
நாணயம்!
வெள்ளுடையில்
வெளியே!
மதியா
ஆண் வர்க்கம்!
வியாபார வரிசையில்
அரசியல்
முதலிடம் !
உருப்படியான
சன்மானம்!
நீதிதேவதையின்
பார்வை
நிதியின் மேல்!
பொய் வெல்லும்
சமூகம்!
சமூகமோர்
நந்தவனம்!
மனிதநேயம்
மலர்ந்து
கொண்டே இருப்பதால்!
இல்லாதோர்க்கு
ஈந்து மகிழ்வோர்
இருப்பதால்!
உயிர் காக்கும்
நோக்கம்
உயர்ந்திருப்பதால்!
சத்தான சமூகச்செடி
முளைக்க
அறமெனும் வித்துகளை
அதிகமாக
விதைத்து வைப்போம்.
வினையாலணையும் உயிர்கள்.
நூலகம் செல்
அமைதியின் சூழலில்
மனம் ஆனந்தம் அடையுமே!
நூலகம் செல்
அறிவுப் பசிக்கு
அருந்தலாம் அருமருந்து
நூலகம் செல்
அறியாமை இருளகற்றும்
அற்புத விளக்குகள்
அலமாரிகளில்
அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
நூலகம் செல்
தத்தளிக்கும் நாவாய்க்கு
தரைகாட்டும் கலங்கரை விளக்காய் வாழ்க்கைக்கு வழி காட்டும்.
நூலகம் செல்
அங்கே மௌனமொழியில்
புத்தகங்கள் உன் மனதோடு பேசும்.
நூலகம் செல் உன் மூளையின்
பெரும்பகுதி பிரயோகிக்கப்படும்.
நூலகம் செல்
அண்ணல் உனக்கு அகிம்சை போதிப்பார்.
நூலகம் செல்
கலாம் உன்னோடு கைகோர்ப்பார்
நூலகம் செல்
பாரதியும் தாசனும்
பாட்டு வித்தைகளைப்
பாங்காய் சொல்லித் தருவார்கள் .
நூலகம் செல்
கவிஞர்கள் உன்னோடு கைகுலுக்குவார்கள்.
நூலகம் செல்
நற்பண்புகள் நாடி வந்து ஒட்டிக் கொள்ளும்.
நூலகம் செல்
ஆன்றோர் பெருமக்கள்
உனக்காகப் புத்தகங்களில்
தன் பொக்கிசங்களை
கொட்டி வைத்திருக்கிறார்கள்.
நூலகம் சென்று நூல்களில்
தலை குனிந்தால்
உன் வாழ்வு தலைநிமிரும்.
ஆலயம் செல்வது சாலவும் நன்று
அதனினும் நன்று
நூலகம் செல்வது…
தேசியப் பறவையே
தேவதையின் வடிவமே!
அழகன் முருகனின்
அன்பான வாகனமே!
தோகை விரித்தாடும்
தோற்றப் பொலிவே!
புலரும் பொழுதில்
பேடையுடன் காதலா?
வருணனை வரவேற்கும்
அலங்கார வளைவே!
நந்தவனப் பூக்கள் எல்லாம்
உன் வண்ணங்களை அல்லவா
வரமாய்க் கேட்கிறது!
நீ மட்டுமா எங்களைக்
கொள்ளை கொண்டாய்?
16 வயதினிலே எனும்
திரையில் வந்த
மயிலும்
மனம் கவர்ந்தவளே!
கவிஞர்களுக்கு எல்லாம்
கற்பனைப் பொருள்
நீதானே!
உங்கள் அகவலோசை
எங்கள் அகங்களில் அல்லவா
கீதம் இசைக்கிறது!
உன் இறகுகளைப்
புத்தகத்தில் வைத்து
குட்டி போடும் என்று
நினைத்த பிரம்மாக்கள்!
மயிலிறகின் மென்மை
மருந்திடும் போது
தெரியுமே!
கருமேகக் காதலனுக்கு
மட்டும் உன் வனப்பை
வசீகரமாய்க் காட்டுகிறாய்!
நீ தேசியப் பறவை தான்
தேசமெல்லாம் உன் அழகில்
அல்லவா மயங்கிக் கிடக்கிறது.
தாத்தாவின் ஆத்திச்சூடி
தாத்தா தாத்தா கதை சொல்லுதங்கத் தமிழில் கதை சொல்லுபாப்பா பாப்பா கதை கேளுபாட்டாய் பாடறேன் கதை கேளு.அன்பாய் நீயும் இருக்கவேஆத்திச்சூடி சொல் கேளு.இன்பமாய் உலகில் நிலைக்கவேஈந்து மகிழ்ந்து உறவாடு.உண்மை பேசும் மொழியோடுஊராரோடு ஒன்றி விடு.என்றும் இருப்பாய் பண்போடுஏற்றம் தருமே பொறுப்போடு.ஐயமின்றி அறிந்து விடுஒழுங்காய் நீயும் படித்து விடுஓங்கி வாழலாம் உலகோடு.ஔடதம் இன்றிக் காத்திடவேஅஃதே வழியாம் யாக்கைக்கு.
தேயத் துவங்கும் நிலவுவளர்வதற்கே.பாயத் துவங்கும்ஆறு போலவே.இடமாறு தோற்றத்தில்இடர்பாடு அன்றிஇயற்கையில் எந்தமாறுபாடும் இல்லை.மனிதநேயம் தேய்வது போல்இருந்தாலும் தேயவில்லைஅறத்தின் வழியேநடக்காதோர் யாருமில்லை.இரக்க குணம்ஊற்றெடுக்காமல் இருந்ததில்லை.நன்றி நவிழல்நடைபெறாமல் இருந்ததில்லை.உதவி புரியாமல்ஒருவரும் இருப்பதில்லை.தர்மம் தலை காக்கும்நம்பாதோர் நாட்டிலில்லை.இறைஞானம் இல்லாதோர்ஞாலத்தில் இல்லை.மலர்கள் பறிக்கப்படுகிறது என்றுமலராமல் இருப்பதில்லை.மான்கள் கொல்லப்படுகிறது என்றுபுலிகள்புசிக்காமல் இருப்பதில்லை.குறைகள் சிலது இருந்தாலும்நிறைகளேநீக்கமற நிறைந்துள்ளது.வளர்சிதை மாற்றத்தின்வளர்ச்சியேதேயத் துவங்கும் நிலவும்.
4 Comments
காதல் மவுனம் கரையைக் கடந்திட
ReplyDeleteசாதல் அகன்றிடும் சற்று.!
*குறட்பா*
பெருவை பார்த்தசாரதி
பெருவை பார்த்தசாரதி
நன்றிகள் ஐயா..
Deleteசெவிலியர்
ReplyDeleteதன்னை லமிலாத தாயின் செயல்போல
தன்னுதவி ஈயும் தகவு!
*குறட்பா*
பெருவை கி.பார்த்தசாரதி
நன்றிகள் ஐயா... குறட்பாவில் வாழ்த்தியது மிகுந்த மகிழ்வைத் தருகிறது.
Delete