செய்திகள்

ஜகர்த்தா,

இந்தோனேசியாவில் இந்தியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது.

இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சிந்து, வியட்நாமை சேர்ந்த குயென் துய் லின் என்பவருடன் நேற்று விளையாடினார். 37 நிமிடங்கள் நடந்த முதல் சுற்று போட்டியில் 22-20, 21-12 என்ற புள்ளி கணக்கில் தோற்று போட்டியில் இருந்து சிந்து வெளியேறினார்.

அதேவேளையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் லட்சயா சென், ஜப்பானின் தகுமா ஒபயாஷியை 21-9, 21-14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 39 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற்ற சென், இன்று நடைபெறும் அடுத்த சுற்று போட்டியில், ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை எதிர்த்து விளையாடுவார்.



from தமிழ் செய்திகள், Tamil news, Tamil news paper, Latest tamil news live, Today Tamil breaking news online | Daily Thanthi https://ift.tt/iAZjDXS
via IFTTT

Post a Comment

0 Comments