செய்திகள்

 சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆன்-லைன் புக்கிங் தளத்தில் கூடுதலான சேவைகளை இணைத்திருப்பதாலும் மற்றும் ஆன்-லைனில் புக்கிங் செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்குவதாலும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் 12 சதவீதம் முன்பதிவு அதிகரித்து உள்ளது.

மேலும், ஐ.ஆர்.சி.டி.சி., டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க்(ஓ.என்.டி.சி.) மற்றும் இ-சேவை மையங்களுடன் பஸ் டிக்கெட் முன்பதிவை இணைக்கும் திட்டங்களால் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Daily Thathi: Tamil News | Today News in Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | Tamil News Online https://ift.tt/4Hi9SOI
via IFTTT

Post a Comment

0 Comments