செய்திகள்

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சத்தீஸ்கார் மாநிலம் நாராயண்பூரின் அபுஜ்மட் வனப்பகுதியில், நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்து நக்சலைட்டுகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.6 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதுவரை சத்தீஸ்காரில், நக்சலைட்டுகள் 214 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/Emv7yAg
via IFTTT

Post a Comment

0 Comments