செய்திகள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 28ம் தேதி முதலாம் ஆண்டு வரலாறு படிக்கும் மாணவர்களுக்கும், 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பைக் பார்க்கிங் செய்வதில் இந்த மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்தார்.

இதையடுத்து காயமடைந்த மாணவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுவரை 3 மாணவர்களை கைது செய்துள்ளனர். அதேவேளை, மோதலை தொடர்ந்து பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக துணை வேந்தர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வரும் 1ம் தேதி முதல் வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் என்று துணை வேந்தர் அறிவித்துள்ளார்.



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/jiVS1EW
via IFTTT

Post a Comment

0 Comments