செய்திகள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 2026-2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது.இதில் இராம நாராயணன் அணி, நலம் காக்கும் அணி என 2 அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1,524 பேர் பங்கேற்று வாக்கு செலுத்தினர்.

வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ‘நலம் காக்கும் அணி’ சார்பில் போட்டியிட்ட ஜிகேஎம் தமிழ்குமரன், 788 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கு தேடுக்கப்பட்டுள்ளார். இதுவரை நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை தமிழ்குமரன் பெற்றுள்ளார்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.மேலும் நிர்வாகிகளும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போதைய பொறுப்பாளர்களின் பதவி காலம் வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் புதிய தலைவர் 2029 வரை தலைமையில் இருப்பார்.



from dailythanthi https://ift.tt/ZyUOuQR
via IFTTT

Post a Comment

0 Comments