பாகல்பூர்
பீகாரில் தந்தை-மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பீகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில், 65 வயது முதியவர் மற்றும் அவருடைய 35 வயது மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தந்தை சேர்க்கப்பட்டார்.
தொற்று உறுதி
இதன் தொடர்ச்சியாக நடந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. மகளுக்கு நடந்த பரிசோதனையிலும் தொற்று உறுதியாகி உள்ளது.
அவர்கள் 2 பேரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். மருத்துவ குழுவினர் தீவிரத்துடன் கண்காணித்து வருவதுடன் சிகிச்சையும் அளித்து வருகின்றனர்.
பொதுமக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நிர்வாகம் கேட்டு கொண்டதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதனால், யாரும் பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளது. சமீபத்தில் ஆந்திர பிரதேசத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில், பீகாரிலும் தொற்று பதிவாகி உள்ளது.
from dailythanthi https://ift.tt/UnvLoby
via IFTTT
0 Comments