செய்திகள்

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம். விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், மாம்பலம், நுங்கம்பாக்கம், கிண்டி, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், திருமழிசை, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/wqeUFWl
via IFTTT

Post a Comment

0 Comments