
நெல்லை,
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 23-வது போட்டி திருநெல்வேலியில் இன்று நடந்தது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த தொடரில் திருச்சி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மதுரை பாந்தர்ஸ் 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராம் அரவிந்த் 14 ரன்களும், அனிருத் சீதாராம் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய அதீக் அர் ரகுமான் 30 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
சரத்குமார்(37 ரன்கள்) மற்றும் குர்ஜப்நீத் சிங்(17 ரன்கள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 132 ரன்கள் என்ற இலக்குடன் திருச்சி அணி விளையாடியது.
தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய வசீம் அகமது 2 ரன்களிலும், ஜெயராமன் சுரேஷ் குமார் 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த திருச்சி அணி வீரர்கள் மதுரையின் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களிலேயே அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய ராஜ்குமார் - ஜாபர் ஜமால் கூட்டணி நிதானமாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியில் 18.1 ஓவரில் திருச்சி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜ்குமார் (37) ரன்களிலும், ஜாபர் ஜமால் (17) ரன்களிலும் களத்தில் இருந்தனர். மதுரை அணி சார்பில் தாமரை கண்ணன், மெய்யப்பன் தலா 2 விக்கெட்டுகளையும், சரவணன், குர்ஜப்னீத் சிங் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/uNC38iO
via IFTTT
0 Comments