செய்திகள்

லிஸ்பன்,

23-வது ‘பிபா’ உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். கண்டங்கள் வாரியாக பல்வேறு நாடுகளில் நடக்கும் தகுதி சுற்று இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

இந்நிலையில், உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியில் இன்று அர்மீனியா - போர்ச்சுகல் மோதின. இதில் 9-1 என்ற கோல் கணக்கில் அர்மீனியாவை வீழ்த்தி போர்ச்சுகல் அபார வெற்றிபெற்றது. ரொனால்டோ இல்லாமலேயே அர்மீனியாவை போர்ச்சுகல் வீழ்த்தியது. இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு போர்ச்சுகல் தகுதி பெற்றுள்ளது. 6வது முறையாக உலகக்கோப்பை தொடரில் ரொனால்டோ பங்கேற்க உள்ளார்.  



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/OXSJlQz
via IFTTT

Post a Comment

0 Comments